செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.80 ஆயிரம் கொள்ளை

Published On 2018-12-03 10:09 GMT   |   Update On 2018-12-03 10:09 GMT
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

போரூர்:

ஈரோட்டைச் சேர்ந்தவர் கமலா. இவர் மதுரவாயலில் உள்ள மகள் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று மாலை அவர் மீண்டும் ஈரோடு செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சில் அமர்ந்தார். அப்போது ரூ.80 ஆயிரம் பணத்துடன் கைப்பையை வைத்திருந்தார். 

பஸ் புறப்பட தயாரான போது கைப்பையை காணாமல் கமலா அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் ரூ.80 ஆயிரம் பணத்துடன் பையை எடுத்து சென்று இருப்பது தெரியவந்தது.

Tags:    

Similar News