செய்திகள்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்தல்- டிரைவர் கைது
லாரியில் உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் சப்இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த லாரியில் உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரி டிரைவர் பெரியபனங்காடு கிராமத்தைச்சேர்ந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தப்படுவது எப்படி? இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் சப்இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த லாரியில் உரிய அனுமதியின்றி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரி டிரைவர் பெரியபனங்காடு கிராமத்தைச்சேர்ந்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்தப்படுவது எப்படி? இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews