செய்திகள்

கடத்தூர் அருகே இளம்பெண் கடத்தல்- போலீசார் விசாரணை

Published On 2018-12-02 15:08 GMT   |   Update On 2018-12-02 15:08 GMT
கடத்தூர் அருகே இளம்பெண் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தூர்:

தருமபுரி மாவட்டம், கடத்தூரை அடுத்துள்ள திண்டாலானூர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகள் செவ்வந்தி (வயது19). இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு செவ்வந்தி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து கோபால் தனது மகள் செவ்வந்தியை அதே பகுதியை சேர்ந்த கோசாமணி மகன் தெய்வமணி (21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக  கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News