செய்திகள்

ஒரத்தநாடு அருகே மாடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

Published On 2018-12-01 09:30 GMT   |   Update On 2018-12-01 09:30 GMT
ஒரத்தநாடு அருகே மாடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே பேய்கரம்பன்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள வயலுக்கு தனது மாடுகளை ஓட்டி சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவலின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று ஆறுமுகம் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் அப்பகுதியில் புயலால் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தடைபட்டுள்ள நிலையில் ஆறுமுகம் எப்படி மின்சாரம் தாக்கி இறந்தார் என்று மின்வாரியத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News