செய்திகள்

பாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி பலி

Published On 2018-11-30 17:31 GMT   |   Update On 2018-11-30 17:31 GMT
பாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்து போனார்.

பாகூர்:

பாகூர் அருகே சின்ன கரையாம்புத்தூரை சேர்ந்த வர் நாகலிங்கம். இவரது மனைவி தெய்வநாயகி (வயது 73). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகலிங்கம் இறந்து விட்டார்.

இதையடுத்து தெய்வநாயகி தனது மகன் பராமரிப்பில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தெய்வநாயகி தனது பேத்தி அபிராமி (21)யுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது தூரத்தில் நாய் ஒன்று வேகமாக குறுக்கே பாய்ந்ததால் அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க அபிராமி திடீர் பிரேக் போட்டார்.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தடு மாறி தெய்வநாயகி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தெய்வநாயகியை அவரது குடும்பத்தினர் மீட்டு பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை தெய்வநாயகி பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News