மதுரை கூடல்நகரில் பைக் மரத்தில் மோதல்- பிளஸ்-2 மாணவர் பலி
மதுரை:
மதுரை காந்திநகர், ஆர்.எம்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் நவீன் (வயது 17). பொன்மேனியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று நவீன், மோட்டார் சைக்கிளில் கூடல் நகர் ரெயிலார் காலனி அருகில் உள்ள குட்செட் பகுதியில் சென்றார். திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பைக், மரத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர் நவீன், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் மதுரை புதூர் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் கமருதீன் (வயது 46). இவர் கொடிக்குளம் கண்மாய்க்கு குளிக்கச் சென்றார். எதிர்பாராத விதமாக அவர், கண்மாய் சகதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இது குறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கமருதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.