செய்திகள்

தருமபுரியில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-11-28 15:17 GMT   |   Update On 2018-11-28 15:17 GMT
தருமபுரியில் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:

தருமபுரி சாலை விநாயகர் ரோட்டில் உள்ள குன்செட்டிபுரத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் கணேசன் (வயது 33). ஆட்டோ டிரைவர்.

இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் தகவலறிந்து சம்பவத்திற்கு சென்று கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News