செய்திகள்
சிவகாசியில் கிணற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் பலி
சிவகாசியில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி:
சிவகாசி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி, அதே பகுதியில் பட்டாசு கடை வைத்துள்ளார்.
இவரது மகன் சுரேஷ் (வயது18). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை சுரேஷ் தனது நண்பர்களுடன் வேலாயுதபுரம் ரஸ்தா ரோட்டில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.
அவருக்கு நீச்சல் தெரியாததால் படியில் நின்றபடி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் சுரேஷ் தவறி விழுந்தார். இதை நண்பர்களும் கவனிக்கவில்லை.
கிணற்றில் மூழ்கிய அவர் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாகஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுரேசின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகாசி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி, அதே பகுதியில் பட்டாசு கடை வைத்துள்ளார்.
இவரது மகன் சுரேஷ் (வயது18). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இன்று காலை சுரேஷ் தனது நண்பர்களுடன் வேலாயுதபுரம் ரஸ்தா ரோட்டில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.
அவருக்கு நீச்சல் தெரியாததால் படியில் நின்றபடி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் சுரேஷ் தவறி விழுந்தார். இதை நண்பர்களும் கவனிக்கவில்லை.
கிணற்றில் மூழ்கிய அவர் சிறிது நேரத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாகஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுரேசின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.