செய்திகள்

ஆம்பூரில் கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை

Published On 2018-11-26 10:15 GMT   |   Update On 2018-11-26 10:15 GMT
ஆம்பூர் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் பணத்தை திருடி சென்றனர்.

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது. அதன் அருகிலேயே 9-வது தெருவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து முருகர் கோவில் கட்டினர்.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு முருகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

5 நாட்களுக்க முன்பு தான் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவில்லை.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News