செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை

Published On 2018-11-26 10:04 GMT   |   Update On 2018-11-26 10:04 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரெயில் முன் பாய்ந்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்திக்குளம் ரெயில்வே கேட் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் நசுங்கி பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடைபெற்றது. இதில் தற்கொலை செய்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பாலசுப்பிரமணியம் (35) என தெரியவந்தது.

தொழிலாளியான அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பால கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News