செய்திகள்

தொடர் மழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-11-25 10:02 GMT   |   Update On 2018-11-25 10:02 GMT
தொடர் மழை காரணமாக தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #SathanurDam
தண்டராம்பட்டு:

தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையின் உயரம் 119 அடியாகும். தற்போது அணையில் 96.40 அடி அளவுக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதாவது 3.249 மில்லியன் கன அடி நீர் உள்ளது.

சாத்தனூர் அணையை பொறுத்தவரை தென்பெண்ணை ஆற்றில் வரும் மழை வெள்ளம் கல்வராயன் மலை பகுதியில் பெய்யும் மழை நீர்ஆகியவற்றையே ஆதாரமாக உள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக கடந்த சில நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கல்வராயன் மலை தொடர் பகுதியிலும் தென்பெண்ணை ஆற்றிலும் மழை நீர் வந்து கொண்டிருக்கிறது.

சாத்தனூர் அணைக்கு நேற்று முதல் வினாடிக்கு 162 கன அடி நீர் வர தொடங்கி உள்ளது. எனவே நீர்வரத்து படிபடியாக உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றபடவில்லை. #SathanurDam

Tags:    

Similar News