வேலூர் கிரீன் சர்க்கிளில் டாக்டரிடம் செல்போன் பறிப்பு
வேலூர்:
வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் வாசு (வயது 50). ஹோமியோபதி டாக்டர். இவர் நேற்று கிரீன் சர்க்களில் செல்போன் பேசிக் கொண்டு நின்றிருந்தார். அப்போது அங்கு ஒரு பைக்கில் வந்த 3 பேர் கும்பல் திடீரென வாசுவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.
அதிர்ச்சியடைந்த வாசு திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டார். அதற்குள் அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது குறித்து வாசு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் செல்போன் பறிப்பு சம்பவம் பதிவாகி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்தது. இந்த பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே போலீசார் இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.