செய்திகள்

தொடர் மழையால் தர்மபுரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published On 2018-11-23 14:03 GMT   |   Update On 2018-11-23 14:03 GMT
தொடர் மழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். #HeavyRain
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். #HeavyRain
Tags:    

Similar News