செய்திகள்

திருப்பூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2018-11-23 10:05 GMT   |   Update On 2018-11-23 10:05 GMT
திருப்பூர் அருகே 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் அடுத்துள்ள பெருமாநல்லூர் தொரவலூர் மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 19) பனியன் நிறுவன தொழிலாளி. சம்பவத்தன்று இவர் 11 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியதால் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவனை அனுமதித்தனர்.

பின்னர் இது குறித்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் பெருமாநல்லூர் போலீசார் விரைந்து சென்று பனியன் தொழிலாளியான வினோத்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News