செய்திகள்

விருத்தாசலம் அருகே மர்மகாய்ச்சலுக்கு பெண் பலி

Published On 2018-11-21 10:30 GMT   |   Update On 2018-11-21 10:30 GMT
விருத்தாசலம் அருகே மர்மகாய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி வளர்மதி(வயது 45). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை புதுவையில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் வளர்மதி பரிதாபமாக இறந்தார்.

மர்மகாய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News