செய்திகள்

தொடர்மழை பெய்தாலும் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படாமல் நடக்கும்- அமைச்சர் உதயகுமார்

Published On 2018-11-21 05:50 GMT   |   Update On 2018-11-21 05:50 GMT
மழை தொடர்ந்து பெய்தாலும் மீட்பு, நிவாரணப்பணிகள் பாதிக்காமல் நடைபெறும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #MinisterUdhayaKumar
சென்னை:

ஜகா புயல் மீட்பு நிவாரப் பணிகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 2 லட்சத்து 15 மரங்கள் விழுந்தன. அவற்றில் 93 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மழை தொடர்ந்து பெய்தாலும் மீட்பு, நிவாரணப்பணிகள் பாதிக்காமல் நடைபெறும்.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. 270 வார்டுகளில் 250 வார்டுகளில் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மீட்பு பணிகள் ஜே.சி.பி. எந்திரம், டிராக்டர் மற்றும் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் நடைப்பெற்று வருகிறது.



பேரூராட்சி, மாநகராட்சிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து ஜெனரேட்டர் மூலம் நீரை வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterUdhayaKumar
Tags:    

Similar News