செய்திகள்
திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து கணவன் கண் முன் மனைவி பலி
திண்டுக்கல் அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து மனைவி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது59). இவரது மனைவி கிருஷ்ணவேணி (49). இவர்கள் 2 பேரும் ஒரு காரில் விருதுநகரில் நடைபெறும் தங்களது உறவினர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொள்வதற்காக வந்துகொண்டிருந்தனர்.
காரை கணேசன் ஓட்டி வந்தார். திண்டுக்கல் அருகில் உள்ள அகரம் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கார் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் வரும் வழியிலேயே கிருஷ்ணவேணி பரிதாபமாக உயிரிழந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.