செய்திகள்
ஓரகடம் அருகே விபத்தில் வாலிபர் பலி
ஓரகடம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஓரகடம் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் மாத்தூர் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். ஓரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை செய்தார்.
இதில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் அந்த வாலிபர் இறந்தது தெரிய வந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.