செய்திகள்

திண்டுக்கல் அருகே பன்றி காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

Published On 2018-11-19 12:22 GMT   |   Update On 2018-11-19 12:22 GMT
திண்டுக்கல் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலியானார். #swineflu

குள்ளனம்பட்டி:

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் பன்றிகாய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது.

பழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்சி என்பவர் பன்றிகாய்ச்சலால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அழகாபுரியை சேர்ந்த குமசேரன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் பொதுமக்களிடையே பீதி அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் அருகே மருனூத்து ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்புரத்தை சேர்ந்தவர் சுல்தான்பேகம் (வயது27). காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ரத்த மாதிரி பரிசோதனையில் பன்றிகாய்ச்சல் அறிகுறி தென்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சுல்தான் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். #swineflu

Tags:    

Similar News