செய்திகள்
இடி-மின்னலுடன் பவானி- சத்தியமங்கலத்தில் கொட்டிய கன மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் ரோடுகளில் மழை தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியது. #heavyrain
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. மாவட்டத்தில் பவானி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் இதேபோல் சத்தியமங்கலம் பகுதியிலும் நள்ளிரவில் கன மழை கொட்டியது.
இந்த திடீர் மழையால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கோபி, கவுந்தப்பாடி மற்றும் கொடிவேரி, பெரும்பள்ளம், குண்டேரி பள்ளம் அணைப்பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டியது.
இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
பவானி- 42.
சத்தியமங்கலம்- 26.
கோபி- 21.
கவுந்தப்பாடி- 19.2.
கொடிவேரி அணை-15.
அணை- 18.
அணை- 12.
அணை- 11.8.
எலந்தகுட்டை மேடு-11.
பவானிசாகர்- 7.
நம்பியூர்- 6.
பு.புளியம்பட்டி- 3.5.
சிவகிரி- 2.2. #heavyrain