செய்திகள்

ஓசூர் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வேன் மோதல்- நோயாளி உள்பட 4 பேர் பலி

Published On 2018-11-18 08:23 IST   |   Update On 2018-11-18 08:23:00 IST
ஓசூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் வேன் மோதியதில் நோயாளி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident #Ambulance
கிருஷ்ணகிரி ஓசூர் அருகே ஆம்புலன்ஸ் வேன் ஒன்று நோயாளியை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்று கொண்டு இருந்தது. அது சீத்தாராம் மேடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, வழியில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News