செய்திகள்

திண்டுக்கல் அருகே காதலியுடன் தஞ்சமடைந்த போலீஸ்காரர்

Published On 2018-11-17 11:41 GMT   |   Update On 2018-11-17 11:41 GMT
திண்டுக்கல் அருகே பாதுகாப்பு கேட்டு காதலியுடன் போலீஸ்காரர் தஞ்சமடைந்தார்.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது35). இவர் திருப்பூர் ஆயுதப்படையில் 2-ம் நிலை போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த தேவிஸ்ரீ(19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறியது. காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்தனர். இந்த விவகாரம் இருவீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் பகுதியில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.

போலீசார் இருதரப்பு பெற்றோரை அழைத்து சமரசம் பேசினர். ஆனால் அவர்கள் இதற்கு உடன்படவில்லை. இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News