செய்திகள்

சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரி புதுக்கோட்டை பகுதி கிராமங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-11-17 10:45 GMT   |   Update On 2018-11-17 10:45 GMT
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
புதுக்கோட்டை:

கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மின்தடையால் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனவயல், மாங்காடு, வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்தன. இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் ஆங்காங்கே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்

இதையடுத்து அங்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் , தங்கள் பகுதியில் சேதமான இடங்களை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட வேண்டும். சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றனர். தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #GajaCyclone
Tags:    

Similar News