செய்திகள்

நெற்குன்றம் கட்டிட தொழிலாளி கொலையில் காண்டிராக்டர் கைது

Published On 2018-11-17 09:36 GMT   |   Update On 2018-11-17 09:36 GMT
நெற்குன்றம் கட்டிட தொழிலாளி கொலையில் காண்டிராக்டரை போலீசார் கைது செய்தனர்.

போரூர்:

நெற்குன்றம் பிள்ளையார் கோவில் 7-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கடந்த 13-ந்தேதி கன்னியம்மாள் கோவில் தெரு அனகாபுத்தூரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ரமேஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் நெற்குன்றத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் வெங்கடேசனிடம் கடந்த 4 வருடங்களாக ரமேஷ் கட்டிட வேலை செய்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனின் மோட்டார் சைக்கிளை ரமேஷ் ஒட்டி வந்ததும் அதை திருப்பி கேட்டபோது குடி போதையில் இருந்த இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசன் திடீரென ரமேசின் காது பகுதியில் ஓங்கி அறைந்தார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்ததும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News