செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே போலி மருத்துவர் கைது

Published On 2018-11-14 10:23 IST   |   Update On 2018-11-14 10:23:00 IST
ஆண்டிப்பட்டி அருகே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்க வணங்காமுடி. இவர் புதிய மருத்துவ கல்வி தகுதியின்றி தனியார் ஆஸ்பத்திரியில் அலோபதி மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

இது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் தினேஷ் குமாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தொலை நிலை கல்வி மூலம் பி.ஏ.எம்.ஸ் படித்த தங்க வணங்காமுடி மருத்துவம் பார்ப்பதற்கான எவ்வித தகுதியும் இல்லாதவர்.

ஆனால் மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தனர்.

Tags:    

Similar News