செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Published On 2018-11-13 04:11 GMT   |   Update On 2018-11-13 04:11 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 6 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 4 ஆயிரத்து 378 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 4 ஆயிரத்து 6 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 4 ஆயிரத்து 378 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று காலை 5 ஆயிரத்து 900 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று இரவு முதல் தண்ணீர் திறப்பு 1,900 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

நேற்று 99.86 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 99.88 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. #MetturDam

Tags:    

Similar News