செய்திகள்

சிங்காநல்லூர் அருகே விவசாயி தற்கொலை

Published On 2018-11-12 11:45 GMT   |   Update On 2018-11-12 11:45 GMT
சிங்காநல்லூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

சிங்காநல்லூர் ஆண்டாள் லே-அவுட்டை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். விவசாயி. இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சிவசுப்பிரமணியம் தினமும் குடித்து விட்டு வருவார்.

இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த சிவசுப்பிரமணியம் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அவரது மனைவி அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News