செய்திகள்
அரக்கோணம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்
அரக்கோணம் அருகே மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டிய டிரைவரை தேடி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் தாசில்தார் பாபு மற்றும் வருவாய்துறையினர் நேற்று பெருமூச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.அதிகாரிகளை கண்ட லாரி டிரைவர் லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.