செய்திகள்

சேத்துப்பட்டில் கள்ளக்காதலியிடம் தகராறு- போலீஸ் ஏட்டு கைது

Published On 2018-11-09 10:01 GMT   |   Update On 2018-11-09 10:01 GMT
சேத்துப்பட்டில் கள்ளக்காதலியிடம் தகராறில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.

சென்னை:

சென்னையைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு ரஜினிகாந்த். இவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இவருக்கும் சேத்துப்பட்டுவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் போலீஸ் ஏட்டு ரஜினிகாந்த் நேற்று சேத்துப்பட்டில் உள்ள கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அங்கு கள்ளக் காதலியிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதுபற்றி அந்த பெண் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் ஏட்டு ரஜினிகாந்தை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன் கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News