செய்திகள்

வேலூர் ஜெயிலில் இருந்து மேலும் 14 கைதிகள் விடுதலை

Published On 2018-11-03 11:47 GMT   |   Update On 2018-11-03 11:47 GMT
வேலூர் ஜெயிலில் இருந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
வேலூர்:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

வேலூர் ஜெயிலில் உள்ள 15 பெண் கைதிகள்- 185 ஆண் கைதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுவரை 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று ஆண்கள் ஜெயிலில் இருந்து 12 பேர், பெண்கள் ஜெயிலில் இருந்து 2 பேர் என மொத்தம் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயிலில் அவர்களுக்கு வேலை பார்த்ததற்கான பணம், உடமைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

ஜெயில் வாசலில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் ததும்ப அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News