செய்திகள்
வேலூரில் நடந்து சென்றவர் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிந்தார். விபத்து குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் கொசபேட்டை கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 50). இவர் வெங்காயமண்டியில் வேலை பார்த்து வந்தார்.
கமலக்கண்ணன் நேற்றிரவு வேலையை முடித்து விட்டு பெரியார் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி கமலக்கண்ணன் மீது மோதியது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் இறந்தார்.
இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் கொசபேட்டை கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 50). இவர் வெங்காயமண்டியில் வேலை பார்த்து வந்தார்.
கமலக்கண்ணன் நேற்றிரவு வேலையை முடித்து விட்டு பெரியார் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி கமலக்கண்ணன் மீது மோதியது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் இறந்தார்.
இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.