செய்திகள்

பல்லடத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-11-03 09:25 GMT   |   Update On 2018-11-03 09:25 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம்:

புதுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி இந்திராகாந்தி (வயது 44). இவர்களது மகள்கள் பெரியநாயகி (23), தாமரைச்செல்வி (21) மற்றும் ரசியா (19). செல்வராஜ் இறந்து விட்டதால் குடும்பத்துடன் பல்லடம் மங்களம் ரோடு அம்மாபாளையத்தில் இந்திராகாந்தி தனது மகள்களுடன் வசித்து வருகிறார்.

ரசியா பல்லடத்தில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மற்றவர்கள் தாயுடன் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தனர். நேற்று வழக்கம்போல் அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். ரசியா மட்டும் வீட்டில் இருந்தார். பகல் முழுவதும் ரசியாவின் நடமாட்டம் இல்லை.

வேலை முடிந்து மகள்களுடன் இந்திராகாந்தி வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு உள் பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த தாய் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது ரசியா தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த தாய் மற்றும் சகோதரிகள் கதறி அழுதனர்.

இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் பிணமாக தொங்கிய ரசியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசியா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News