செய்திகள்

ஐகோர்ட்டில் பாதுகாப்புக்கு சென்ற மத்திய பாதுகாப்பு படை வீரர் திடீர் மாயம்

Published On 2018-11-02 14:50 IST   |   Update On 2018-11-02 14:50:00 IST
ஐகோர்ட்டில் பாதுகாப்புக்கு சென்ற மத்திய பாதுகாப்பு படை வீரர் திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள சென்னை துறைமுக பொறுப்பு கழக குடியிருப்பில் வசித்து வருபவர் பிரபேஸ். ஜெய்ப்பூரை சேர்ந்த இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக உள்ளார். சென்னை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் பாதுகாப்பு பணிக்கு சென்ற பிரபேஸ் பின்னர் திரும்பிவரவில்லை. அவர் மாயமாகி இருப்பது தெரிந்தது. இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News