செய்திகள்
அரியலூரில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 18). இவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தினமும் பஸ்சில் தஞ்சாவூருக்கு சென்று படித்து விட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 30-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். பின்னர் வீடுதிரும்பவில்லை. தங்கராசு மகளை பல இடங்களில் தேடினார். எங்கும் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவர் துத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி ஜெயலட்சுமியை தேடி வருகிறார்கள்.