செய்திகள்
ஆம்பூர் அருகே பைக்-வேன் மோதல்- வாலிபர் பலி
ஆம்பூர் அருகே வேன் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
ஆம்பூர்:
ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அக்கில்அகமது இவரது மகன் ஆசிப் (வயது 18). இவர் நேற்று மாலை கன்னிகாபுரத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த வேன் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆசிப் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.