செய்திகள்

காரைக்குடி அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் கொலை- கணவர் கைது

Published On 2018-11-01 10:06 GMT   |   Update On 2018-11-01 10:06 GMT
குடும்பத்தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அழகா புரியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக பெரியநாயகி (36) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி சேகர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே விரோதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை பெரியநாயகி தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடப்பதாக பள்ளத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெரிய நாயகியை சேகர் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. சேகரை கைது செய்த போலீசார், பெரியநாயகியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News