செய்திகள்

வாலாஜா அருகே குட்டையில் முழ்கி வாலிபர் பலி

Published On 2018-10-31 11:20 GMT   |   Update On 2018-10-31 11:20 GMT
வாலாஜா அருகே குட்டையில் முழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜா:

வாணியம்பாடி வடக்குபட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் அருண்குமார் (18). இவர் கடந்த ஒரு வருடமாக வாலாஜா சீனிவாசன் பேட்டையில் உள்ள அவரது பெரியம்மா வீட்டில் தங்கி ராணிப்பேட்டை தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அருண்குமார் நேற்று தனது நண்பர்கள் 6 பேருடன் பூண்டி பாலாற்றில் உள்ள குட்டையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது அருண்குமார் மட்டும் குட்டையில் இறங்கி குளித்தார். சிறிது நேரத்தில் அருண்குமார் குட்டை நீரில் மூழ்கி தத்தளித்தார்.

இதனை கண்ட அவரது நண்பர்கள் நீண்ட நேரமாக போராடி அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News