செய்திகள்

மாமல்லபுரம் அருகே பள்ளி மாணவி தற்கொலை

Published On 2018-10-30 06:16 GMT   |   Update On 2018-10-30 06:16 GMT
மாமல்லபுரம் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த சாலவான் குப்பத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் அர்ச்சனா (வயது14). நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். ரவிச்சந்திரன் தினசரி மது அருந்தி விட்டு வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்தார். இதை தட்டிக்கேட்ட மனைவி அர்ச்சனாவை அவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் மன முடைந்த அர்ச்சனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

Similar News