செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 4 நாள் தொடர் விடுமுறை - அரசு பணியாளர்களுக்கு ஜாக்பாட்

Published On 2018-10-29 14:57 GMT   |   Update On 2018-10-29 14:57 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ. 5-ம் தேதி அரசு விடுமுறை என அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதால் அரசு பணியாளர்களுக்கு 4 நாள் விடுமுறை கிடைத்துள்ளது. #Diwali #GovernmentHoliday
சென்னை:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நவம்பர் 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால் அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் திங்கட்கிழமை விடுமுறை எடுத்து தீபாவளியை கொண்டாட முடிவு செய்திருந்தனர்.

எனவே, நவம்பர் 5-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி அன்று அரசு விடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது.

அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இரண்டாவது சனிக்கிழமையான நவம்பர் 10-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல விரும்பும் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சனி ஞாயிறு விடுமுறை என்பதால் மேலும் இரு நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. #Diwali #GovernmentHoliday
Tags:    

Similar News