செய்திகள்
கோடம்பாக்கம்-தி.நகரில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன்-பணம் திருட்டு
கோடம்பாக்கம்-தி.நகரில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன்-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை தி.நகர் தெற்கு போக் ரோட்டில் வசித்து வருபவர் இக்னேசியஸ். இவர் தனது வீட்டு முன்பு தனக்கு சொந்தமான காரை நிறுத்தி இருந்தார். கார் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதுபற்றி மாம்பலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல கோடம்பாக்கத்தில் கால்டாக்சி டிரைவர் சூரியபிரகாஷ், தனது காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு தூங்கினார். அவரது கார் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள் திருடப்பட்டன. இதுபற்றி கோடம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.