செய்திகள்
தருமபுரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
தருமபுரி அருகே தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டடு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:
தருமபுரி அதியமான் கோட்டை அடுத்துள்ள லளிகம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி லட்சுமி (வயது28), இவர் தீராத வயிற்று வலியால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் பூச்சி மருந்து குடித்தார்.
இதை பார்த்த குடும்பத்தினர் மீட்டு லளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.