செய்திகள்
வேளச்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வேளச்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளச்சேரி:
கிழக்கு தாம்பரம், கணபதிபுரம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 18). தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தனது செல்போனில் அடிக்கடி ‘கேம்’ விளையாடி வந்தார். இதனை அவரது தாய் கண்டித்து செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டனர். இதனால் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.