செய்திகள்

முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கியதில் பெயிண்டர் பலி

Published On 2018-10-25 10:57 GMT   |   Update On 2018-10-25 10:57 GMT
முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கியதில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி:

புதுவை வைத்திக்குப்பம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் பிரேம்குமார் (வயது 23). பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

நேற்று இவர் வாழைகுளம் அக்காசாமி மடம் லட்சுமி கார்டன் பகுதியில் பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சுவிட்ச் போர்டில் பிளக்கை சொருக முயன்றபோது, எதிர்பாராத விதமாக பிரேம்குமாரை மின்சாரம் தாக்கியது.

இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்த தொழிலாளர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரேம்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News