செய்திகள்
துரைப்பாக்கம் அரசு பள்ளி எதிரே வாலிபர் தீக்குளித்து பலி
துரைப்பாக்கம் அரசு பள்ளி எதிரே வாலிபர் தீக்குளித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:
துரைப்பாக்கம் அரசு பள்ளி எதிரே நேற்றிரவு வாலிபர் ஒருவர் மண்ணெய் கேனுடன் வந்து நின்றார்.
திடீர் என்று அவர் உடலில் மண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். பற்றி எரிந்த தீயுடன் அலறி துடித்தார்.
இதை பார்த்த மக்கள் அருகில் உள்ள துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல் கருகிய நிலையில் கிடந்த அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார். யார்? எதற்காக தீக்குளித்தார் என்பது தெரியவில்லை.
இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.