செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பரிதாப பலி
கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாப உயிரிழந்தார்.
கோவை:
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 25). நேற்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் நவக்கரை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்களில் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்து உயருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சதீஸ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சதீஸ்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.