செய்திகள்
ஒகேனக்கல்லில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
ஒகேனக்கல்லில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
ஒகேனக்கல்:
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இதனால் மக்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தனர்.
மேலும் ஒகேனக்கல்லில் ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் மீன்கள் வாங்கி கொண்டு விறகு அடுப்பில் சமையல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி பகுதியில் மீன் சாப்பாடு சமைத்து வாங்கி கொண்டு குடும்பத்துடன் மீன் சாப்பாடு உணவை ரசித்து சாப்பிட்டனர்.
கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது.
கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் நேற்று முன் தினம் காலை வினாடிக்கு 21,700 கன அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக வந்தது.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக மெயின்அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, காவிரி கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். தொங்கு பாலத்தில் சென்று மகிழ்ந்தனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இதனால் மக்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தனர்.
மேலும் ஒகேனக்கல்லில் ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் மீன்கள் வாங்கி கொண்டு விறகு அடுப்பில் சமையல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி பகுதியில் மீன் சாப்பாடு சமைத்து வாங்கி கொண்டு குடும்பத்துடன் மீன் சாப்பாடு உணவை ரசித்து சாப்பிட்டனர்.
கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது.
கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லில் நேற்று முன் தினம் காலை வினாடிக்கு 21,700 கன அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக வந்தது.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக மெயின்அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, காவிரி கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். தொங்கு பாலத்தில் சென்று மகிழ்ந்தனர்.