செய்திகள்

மதுரை அருகே போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது

Published On 2018-10-20 15:54 IST   |   Update On 2018-10-20 15:54:00 IST
மதுரை அருகே போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை:

மதுரை கே.புதூர் உலகநாதன் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 38). நேற்று இரவு ஆத்திக்குளம் பஸ் நிறுத்தம் அருகே இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்கு வரத்து போலீஸ்காரர் கார்த்திக், தடுத்து நிறுத்தினார். அவர் ராஜ்குமார் மது அருந்தி உள்ளாரா? என்பதை அறிய அதற்கான கருவி மூலம் பரிசோதனை நடத்த முயன்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜ்குமார், போலீஸ்காரர் கார்த்திக்கை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ராஜ்-குமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News