திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை நல்லபாளி செல்வராஜ் மகன் கார்த்திக் (வயது 22). திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
சென்னிமலை முருங்க தொழுவு பகுதியில் தாய் பராமரிப்பில் 17 வயது ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவருக்கு திருமண ஆசை காட்டி, வீட்டை விட்டு தன்னுடன் அழைத்து சென்றார். காரத்திக் .
அப்பெண்ணின் தாய் தனது, மகள் காணாமல் போனது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னிமலை பகுதியில் இருவரையும் பிடித்தனர்.
இருவரையும் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அப்பெண்ணுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது பெற்றோரிடம் பெண் ஒப்படைக்கப்பட்டார்.
திருமண வயதை அடையாத பெண்ணை திருமண ஆசை வார்த்தை காட்டி கடத்தி சென்ற கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் ஈரோடு மகளிர் போலீசார் கைது செய்தனர்.