செய்திகள்

திருவள்ளூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகை

Published On 2018-10-17 09:04 GMT   |   Update On 2018-10-17 09:04 GMT
திருவள்ளூர் அருகே மணல் குவாரியை மூடக்கோரி இன்று 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே போலிவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் மணல் டென்டர் விடப்பட்டது. அதன்படி ஏரியில் மணல் குவாரி அமைத்து மணல் எடுக்கப்பட்டது. 3 அடிக்கு மட்டுமே மணல் தோண்டி எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சுமார் 15 அடிவரை பள்ளம் தோண்டி மணல் எடுக்கப்பட்டு உள்ளதாக போலிவாக்கம் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் மணல் குவாரியை மூடக்கோரி இன்று 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் மணல் எடுத்த பள்ளத்துக்குள் அமர்ந்து கோ‌ஷம் எழுப்பினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

ஏரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் 15 அடிக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் 35 அடியில் தண்ணீர் வந்துவிடும்.

ஆனால் தற்போது 80 அடியில்தான் தண்ணீர் வருகிறது என்றனர். தகவல் அறிந்ததும் மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News