செய்திகள்

ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2018-10-16 17:54 GMT   |   Update On 2018-10-16 17:54 GMT
சமயபுரம் போலீசாரும், புறத்தாக்குடி வீரமாமுனிவர் மக்கள் நல்வாழ்வு அமைப்பினரும் இணைந்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினர்.
சமயபுரம்:

சமயபுரம் சுங்கச் சாவடியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமை தாங்கினார். சப்- இன்ஸ்பெக்டர் கள் அகிலன், செல்வராஜ், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வனராஜு ஆகியோர் பேசினர். ஊர்வலம் இனாம்சமயபுரம், சமயபுரம் பஸ் நிலையம், கடைவீதி, நாலுரோடு, பழைய பெட்ரோல் பங்க் வழியாக சென்று மீண்டும் கடைவீதியை வந்தடைந்தது.

இதில் வீரமாமுனிவர் மக்கள் நல்வாழ்வு அமைப்பின் தலைவர் ஆரோக்கியதாஸ், செயலாளர் கபிரியேல், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டு, இருசக்கர வாகனங்களில் சென்றனர். முடிவில் சமயபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா நன்றி கூறினார்.
Tags:    

Similar News